இந்து கோவில்களின் பின்னணியில் இருக்கும் அறிவியல் ரீதியான காரணங்கள்!
நேர்மறையான ஆற்றல் திறனின் கிடங்கு
வட/தென்
துருவ உந்துதலின் காந்த மற்றும் மின்னாற்றலுக்குரிய அலை விநியோகங்களால்
நேர்மறையான ஆற்றல் திறன் அதிகமாக இருக்கும் இடத்தில் மூலோபாய
முக்கியத்துவத்துடன் கோவில்கள் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் மையப்பகுதியில்
தான் மூலவரின் சிலை. இந்த இடத்தை கர்பாக்ரிஹா அல்லது மூலஸ்தானம் என
அழைப்பார்கள். சொல்லப்போனால் மூலஸ்தானத்தைச் சுற்றி தான் கோவில்களே கட்டப்பட்டிருக்கும்.
நேர்மறையான ஆற்றல் திறனின் கிடங்கு
மூலஸ்தானத்தில்
தான் பூமியின் காந்த அலைகள் அதிகபட்சமாக இருக்கும். முன்னதாக, மூலவரின்
சிலைக்கு அடியில் தாமிர தட்டுக்கள் வைக்கப்பட்டிருக்கும். இந்த தட்டுக்கள்
பூமியின் காந்த அலைகளை உறிஞ்சி, அதனை சுற்றுபுறத்தில் பரவச் செய்யும்.
அதனால் நீங்கள் சிலைக்கு அருகில் நிற்கும் போது, உங்கள் உடலும் இந்த ஆற்றல்
திறன்களை உள்வாங்கும். அதனால் உடலுக்கு தேவையான நேர்மறையான ஆற்றல்
திறன்கள் நமக்கு கிட்டும்.
சிலை
சிலை
என்றால் கடவுள். இறைவனின் பௌதீக வடிவிலான தோற்றமே சிலை. இது மனிதர்களை
ஒருமுனைப்படுத்த உதவும். மேலும் கடவுளை உணர்ந்து கொள்ளும் அடுத்த
கட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும். கடவுளை வணங்குவதன் மூலமாக, அடுத்த
கட்ட மன ரீதியான பிரார்த்தனைக்கு ஒருவர் அழைத்துச் செல்லப்படுகிறார்.
இறைத்தன்மையை எப்போது ஒருவர் உணர்கிறாரோ, அப்போது அவர் கடைசி நிலையை
அடைகிறார். அதனால் ஒருவரை ஒருமுனைப்படுத்த சிலை நமக்கு பெரிதும் உதவுகிறது.
மேலும் கடைசி நிலையை அடையவும் இது உதவிடும்.
பிரதக்ஷணம்
கடவுளை
வணங்கிய பிறகு, சிலையை மூன்று முறை சுற்றி வருவது ஒரு மரபாகும். இந்த
பழக்கத்தை பரிக்ராமா அல்லது பிரதக்ஷணம் என கூறுவார்கள். நேர்மறை ஆற்றல்
திறன்களை கொண்டுள்ள்ள சாமி சிலைகள், அதன் அருகில் இருக்கும் அனைத்திற்கும்
அதனை பரப்பும். இதனால் சிலையைச் சுற்றி பிரதக்ஷணம் செய்யும் போது,
சிலையில் இருந்து பரவிடும் அனைத்து விதமான நேர்மறை ஆற்றல் திறன்களும்
உங்களுக்கு வந்து சேரும். இது நோய்களை குணப்படுத்தி மனதை புத்துணர்ச்சி
பெற வைக்கும்.
கோவில் மணிகளை அடிப்பது
சாதாரண
உலோகத்தில் செய்யப்படுவது அல்ல கோவில் மணிகள். கேட்மியம் (தகர உலோக வகை),
ஜிங்க், ஈயம், தாமிரம், நிக்கல், குரோமியம் மற்றும் மாங்கனீசு போன்ற பல
உலோகத்தின் கலவையால் செய்யப்படுவதே கோவில் மணிகள். கோவில் மணியை உருவாக்க
பயன்படுத்தப்படும் உலோகத்தின் விகிதத்திற்கு பின்னணியில் அறிவியல்
அடங்கியுள்ளது. ஒவ்வொரு முறை மணி அடிக்கப்படும் போதும், ஒவ்வொரு உலோகத்தில்
இருந்து தனித்துவமான ஒலி ஏற்படும் வகையில் ஒவ்வொரு உலோகமும்
கலக்கப்பட்டிருக்கிறது. இந்த தனித்துவமான ஒலிகளால், நம் இடது மற்றும் வலது
மூளையில் ஒற்றுமையை உண்டாக்கும். அதனால் மணியை ஒலிக்க தொடங்கிய அடுத்த
நொடியிலேயே கூர்மையான மற்றும் நீண்ட நேரம் நீடிக்க கூடிய சத்தம் எழும்.
இந்த சத்தம் 7 நொடிகள் வரை நீடிக்கும். மணியோசையில் இருந்து வரும்
எதிரொலி, உங்கள் உடலில் உள்ள ஏழு சக்கரங்களையும் தொடும். அதனால், மணி
ஒலிக்கப்பட்ட உடனேயே, சில நொடிகளுக்கு உங்கள் மூளை வெற்றாக மாறி,
நினைவிழந்த நிலையை அடைவீர்கள். நினைவிழந்த நிலையை அடையும் போது, உங்கள்
மூளையின் வாங்குந்தன்மையும், உணர்வு திறனும் தீவிரமடையும்.
சக்தி வாய்ந்த கலவை
கோவில்களில்
உள்ள சிலைகளை ஒரு வகை கலவையால் அபிஷேகம் செய்யப்படும். அதன் பின்
'சரணம்ரிடா' எனப்படும் அந்த அபிஷேக நீர் பக்தர்களுக்கு தீர்த்தமாக
வழங்கப்படும். இதில் உள்ள சுவாரசியம் என்னவென்றால், இந்த குறிப்பிட்ட
அபிஷேக நீர் சாதாரண கலவை கிடையாது. தண்ணீருடன் துளசி, குங்குமப்பூ,
கற்பூரம், ஏலக்காய் மற்றும் கிராம்பு சேர்க்கப்படும் கலவையாகும் இது.
கடவுளுக்கு அபிஷேகம் செய்வது எதனால் என தெரியுமா? அப்படி செய்வதால் அந்த
அபிஷேக நீரில் காந்த அலைகள் உள்ளேரிடும். இதனால் அதன் மருத்துவ மதிப்பு
மென்மேலும் அதிகரிக்கும். பக்தர்களுக்கு 3 டீஸ்பூன் தீர்த்தம்
வழங்கப்படும். காந்த தெரபியின் முக்கிய மூலமாக அமைகிறது இந்த நீர்.
இதுப்போக, அதிலுள்ள கிராம்பு பற்சொத்தை ஏற்படாமல் பாதுகாக்கும்;
குங்குமப்பூவும் துளசியும் சளி மற்றும் இருமலில் இருந்து பாதுகாக்கும்;
ஏலக்காய் மற்றும் கற்பூரம் இயற்கையான வாய் சுத்தப்படுத்திகளாக இருக்கும்.
சங்கு ஊதுதல்
இந்து
மதத்தில், ஓம் என்ற புனிதமான வார்த்தையுடன் நெருங்கிய தொடர்பை
கொண்டுள்ளது சங்கில் இருந்து வரும் சத்தம். ஓம் என்பதே படைத்தலின் முதல்
ஒலியாக நம்பப்படுகிறது. எந்த ஒரு நல்ல காரியத்தை ஆரம்பிப்பதற்கும், ஒரு
நல்ல தொடக்கமாக இருக்க சங்கு பயன்படுத்தப்படுகிறது. சங்கில் இருந்து வரும்
ஒலியே மிகவும் புனிதமான உருவாக கருதப்படுகிறது. இது புத்துணர்வையும்,
புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தும். கோவில்களில் இருந்து வெளிப்படும்
நேர்மறை ஆற்றல் திறன்களை இது அதிகமாக்கும். அதனால் பக்தர்களின் மீது
அருமையான தாக்கங்களை ஏற்படுத்தும்.
ஆற்றல்களின் பரிமாற்றம்
நாம்
அனைவரும் அறிந்ததை போல், ஆற்றலை உருவாக்கவோ அழிக்கவோ முடியாது. அதனை ஒரு
உடலில் இருந்து மற்றொன்றுக்கு மாற்ற மட்டுமே முடியும். கோவில்களும் நமக்கு
அதையே செய்கிறது. பூமியின் மேற்பரப்பில் இருந்து நேர்மறை ஆற்றல்களை
அவைகள் எடுத்து, பல வழிகளில் மனிதர்களின் உடலுக்குள் மாற்றுகிறது. அதனால்
ஒரு நாளில் நீங்கள் இழக்கும் அனைத்து ஆற்றல்களும், கோவிலுக்கு
தொடர்ச்சியாக செல்வதால் மீண்டும் வந்தடையும். கோவிலுக்கு செல்வதன் முக்கிய
நோக்கம் கடவுள்களுக்கு காணிக்கை செலுத்துவதற்கு இல்லை. உங்கள்
உணர்ச்சிகளை புதுப்பிக்கவே அதன் குறிக்கோளாகும். அதனால் வழிபாட்டிற்கு
பிறகு சிறிது நேரம் நாம் கோவிலில் அமர்ந்திருக்கிறோம். கடவுளை
வணங்குவதும், வழிபாட்டில் ஈடுபடுவதும் இங்கே முக்கியமாக கருதப்படுவதில்லை;
கோவிலுக்கு சென்று சிறிது நேரம் அங்கே உட்காராமல் சென்றால், கோவிலுக்கு
வந்த காரணமே பூர்த்தியடையாமல் போய் விடும்.
No comments:
Post a Comment